Powered By Blogger

Monday, 30 January 2012


 ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!

                              வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
                                         
                                     வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

                                        கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர். 




15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.






                                                     
                                         இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
                                                 




                                            உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின்  தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 

                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional). 
                                         


               CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து  THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.



                  

           உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.



நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com



    

வேண்டுகோள்:1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.
      2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி:visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!
இன்று (05.01.2012)குற்றாலத்தில் விடிவெள்ளி விசாலினிக்கு நடைபெற்ற பாராட்டு  விழா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:



விசாலினியின் டுடும்பத்தினருடன் பதிவர்கள் சங்கரலிங்கம்,செல்வகுமார்,
மதுரை சரவணன்,சீனா அய்யா.


அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் விசாலினிக்கு,
தமிழ்பதிவர்கள் சார்பாக கேடயம் வழங்குகிறார்.


தொலைக்காட்சி பேட்டியில் விசாலினி


விசாலினியின் பெற்றோருடன் உணவு உலகம் சங்கரலிங்கம்,
செல்வா ஸ்பீக்கிங் செல்வகுமார்.

நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு:




நன்றி:தேவா (தடை பல கடந்து, படம் வெளியிட துணை புரிந்ததற்கு)
தினமலரில் நிகழ்ச்சி குறித்த செய்தி:

Thursday, 26 January 2012

மாற்றுத் திறனாளி சிறுமியின் "ஏழாம் அறிவு': தேதி சொன்னால் கிழமையை சொல்லும் அதிசயம்


திருச்சி: கடந்தாண்டு மே மாதம் 4ம் தேதி என்ன கிழமை என்று கேட்டால், "புதன் கிழமை' என்று பளிச்சென்று சொல்லி, திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்.

கடந்தாண்டு மே மாதம் 4ம் தேதி, என்ன கிழமை என்று கேட்டால், நாம் அனைவரும் காலண்டரை புரட்டுவோம் அல்லது மொபைல் போனில் உள்ள காலண்டரை பார்ப்போம். ஆனால், திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமி பிரியங்காவிடம், 2010, 2011, 2012, 2013 ஆகிய நான்கு ஆண்டுகளில் மாதம், தேதியை குறிப்பிட்டு கேட்டால், சரியான கிழமைகளைச் சொல்லி அசத்துகிறார். திருச்சி, தீரன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 47; சென்னையில், செக்யூரிட்டி கார்டாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பானு; உறையூர் சிவாலயா பாலானந்தா பள்ளியில் சிறப்பு குழந்தைகளை கவனித்துக்கொள்ளும், "கேர் டேக்கராக' வேலை பார்க்கிறார். இவர்களது மகள் பிரியங்கா, 11. புத்தூர் நால்ரோட்டில் உள்ள ஆல்-சைன்ட்ஸ் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.
 
பிரியங்காவுக்கு, மற்ற குழந்தைகளை காட்டிலும் தனித்திறன் உள்ளது. பிரியங்கா பிறக்கும்போது, மாறுகண் ஏற்பட்டது. இடது கை செயல்படவில்லை. இடது கால் வளர்ச்சி குன்றி காணப்பட்டது. அவர் வளர்ந்த பிறகு சற்று திக்கி... திக்கித் தான் பேசினார். மனம் தளராத தாய் பானு, குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். கடந்தாண்டு ஜூலை 10ம் தேதி இரவு 11 மணிக்கு அவரது தாய் பானு, "ஆகஸ்ட் 13ம் தேதி "லீவு' போடணும். "லீவு' கிடைக்குதா? என்னானு தெரியலை' என்று புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது, பிரியங்கா, "ஆகஸ்ட் 13ம் தேதி சனிக்கிழமை உனக்கு "லீவு' தானே அம்மா?' என்று சாதாரணமாக கூறியுள்ளார். இதைக் கேட்ட பானு, காலண்டரை புரட்டி பார்த்து, ஆச்சர்யமானார். சிறுமி சொன்னது சரியாக இருந்தது.

இதுகுறித்து பிரியங்காவின் தாய் பானு கூறியதாவது: பிரியங்காவுக்கு இப்படி ஒரு, "சூப்பர் பவர்' இருப்பது, கடந்தாண்டு ஜூலை 10ம் தேதி தான் தெரியும். 2010, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் எந்த மாதம், தேதியை குறிப்பிட்டு கேட்டாலும் சரியாக கிழமையை சொல்லிவிடுவாள். அதேபோல், குறிப்பிட்ட மாதத்தில் எந்தெந்த தேதியில் எத்தனை முறை ஒரே கிழமை வருகிறது என்று கேட்டாலும் சரியாக சொல்லிவிடுவாள். ஆறு வயதுக்கு மேல் தான் நடக்க ஆரம்பித்தாள். சமீபத்தில் தான் காலில் ஆபரேஷன் செய்தோம். தற்போது ஓரளவு காலை ஊன்றி நடக்கிறாள். கை தான் இன்னும் சரியாகவில்லை. இவ்வாறு பானு கூறினார்.

சிறுமி பிரியங்கா கூறுகையில், ""எனக்கு டியூஷன் எடுக்க வரும் ராஜாத்தி, "மிஸ்' தான் காலண்டரை படிக்கும்படி கூறினார். அன்றிலிருந்து காலண்டரை பார்த்து படித்து பழகினேன். எந்த தேதி கேட்டாலும் சொல்வேன்,'' என்றார். மாற்றுத் திறனாளிகள் மிகவும் திறமை யானவர்கள் என்பதற்கு பிரியங்கா ஒரு நல்ல உதாரணம். மாற்றுத் திறனாளி குழந்தை களிடம் நாம் எதிர்பார்க்காத பல திறமைகள் மறைந்து கிடக்கின்றன. அதை வெளிக்கொண்டு வருவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.